பக்கங்கள்

சிலுவை வலிகளும் இறைவனின் மனக்குழப்பமும்


யேசு குறித்தும் அவரது மரணம் குறித்தும் சில தகவல்கள்… சிந்தனைகள்.

யேசு… குற்றம் சாட்டப்பட்டார், அவசர அவசரமாய்… அபாண்டமாய் கொலை தீர்ப்பளித்து…. இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்.. என்பதை வரலாறாய் நாம் வாசிக்கிறோம்…,


யேசு… இறைவனின் மகன். புதுமைகள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். தன் பரம பிதா.. தந்தையிடம் இருந்து எதையும் கேட்டுப் பெறும் ஆற்றல் பெற்றிருந்தார். இறந்து போன லாசரை உயிருடன் எழுப்பித்தார். தண்ணீரை.. திராட்சை ரசமாக மாற்றினார். அப்படி எத்தனை எத்தனையோ…… அவரின் இறுதிக் காலத்தை பார்ப்போமா….

அவருக்கு அப்போது வயது 33. தன் சாவு குறித்து அவர் உணர்ந்து கொண்டார். இன்று.. தான் பிடிக்கப் படுவேன் என அறிந்தார். அது மட்டுமா, அது எப்படிப்பட்ட சாவு என்பதையும் அவர் மிக தெளிவாக உணர்ந்தார்.

தன் சீடனாலேயே காட்டிக் கொடுக்கப் படுவேன், சவுக்கால் அடிக்கப்படுவேன், ரத்தம் விளாறு விளாறாக வழியும். வேதனை உச்சமாய் இருக்கும். முள்முடி சூட்டப்படுவேன். அது தலையை குத்திக் கிளிக்கும். கையிலும், காலிலும் ஆணி அடிக்கப்படுவேன். உடலில் இருக்கும் ரத்தம் முழுதும் வெளியேற, உடம்பில் ரத்தமே இல்லாமல், வெறும் தண்ணீராக இருக்கும். சிலுவையில் சாவேன்…..

என மிக தெளிவாக, உணர்ந்தார். இதையெல்லாம் நடக்கும் என்று அறிந்த உடனே… அவர் தன் தந்தையிடம்.. ஓடிச் சென்றார்… அவரை கூவி அழைத்தார்…. தந்தையே… பரம பிதாவே.. வேண்டாம்.. இது எனக்கு வேண்டாம்.. இந்த சாவு எனக்கு வேண்டாம்.. என்னை காப்பாற்றுங்கள். இந்த சாவை என்னை விட்டு அகலச் செய்யுங்கள் என மன்றாடினார்…
வானகத்திலிருக்கும் தந்தை… பதில் தரவில்லை… மௌனம்.. மௌனம்… யேசு கலங்கினார்… இன்னும் உரக்க கூவினார்…..

இறை மக்களுக்காக… எப்போதெல்லாம் கூவி அழைத்தாரோ.. அப்பொதெல்லாம் செவிமடுத்த தந்தை இப்போது பதில் பேசவில்லை…இறந்த லாசரின் சகோதரி… துக்கங் கேட்டு கலங்கி.. அப்பா தந்தையே… என அழைத்த போது… பரம தந்தை லாசர் உயிர் திருப்பிக் கொடுத்தார்…. அப்படி கொடுத்தவர்… இன்று தனக்கென ஒரு வரம் கேட்கும் போது தலை திருப்பி கொண்டார்…

கானாவூர் திருமணத்தில்…  தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியவர்… செவிகளை திருப்பிக் கொண்டார்… யேசு மேலும் கலவரமானார்… சற்று நேரம் கழிந்து மறுபடி கூவினார்… அழுதார்… வேண்டாம்.. வேண்டாம்.. என்னை காப்பாற்றுங்கள் என்றார்…

இப்போதும் இறைவனின் தந்தை அவரது குரலை கேட்கவில்லை…
யேசு.. மேலும் நடுங்கினார்… வியர்வை ஓடியது.. இன்னும் பயந்தார்… ரத்தம் தறி கெட்டு ஓடியது… ஓடிய ரத்தம் அபரிமிதமான வேகத்தில் ஓடியது… அந்த ரத்தம் இதயத்தை தாறு மாறாக ஆக்கியது…
ரத்தம்… வேர்வை நாளங்களில் எல்லாம் வழிந்தது… யேசு அஞ்சினார்… தன் சாவைக் குறித்த பயத்தால்… என்ன செய்வது என தெரியாமல் அலை மோதினார்..

அங்கிருந்து வந்து தன் சீடர்களை … பார்த்து… நான் கூக்குரலிட்டேன்.. தந்தை பதில் தரவில்லை.. எனக்காக நீங்கள் கேளுங்கள்…. எனக்காக பிரார்த்தியுங்கள்… என வேண்டினார்.. அவர்களை பிரார்த்தனை செய்யச் சொல்லி விட்டு.. மீண்டும் சென்று.. தந்தையிடம் பேசினார்…
மண்டியிட்டு, தந்தையே தந்தையே.. என குரல் கொடுத்தார்.. பதிலில்லை..… பதிலில்லை… தந்தையே.. தந்தையே.. ஏன்.. ஏன்… என்னை கை விட்டீர் என கூப்பாடு போட்டார்.
இல்லை.. தந்தை கேட்கவில்லை.. யேசுவுக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை.. சரி… என் நிலையை விட.. உங்கள் முடிவே முக்கியம். நான் தங்கள் சித்தப்படி… நடக்கிறேன்.. இச்சாவை ஏற்றுக் கொள்கிறேன்.. என சமாதானம் செய்து விட்டு அங்கிருந்து அகன்றார்…. இயலாமை.. இயலாமை… திரும்பி வந்து பார்த்த போது, சீடர்களும் தூங்கி கொண்டிருந்தார்கள்.. அழுகை.. பயம் எல்லாம் கோபமாக வெளி வந்தது… சீடர்களை பார்த்து கேட்டார்…

என்ன இது. ஒரு மணி நேரம் முழித்திருந்து எனக்காக பிரார்த்திக்க கூடாதா…
யேசுவின் மனித இயலாமைகளை நாம் காண்கிறோம்…. விவிலியத்தில் இறைமகனின் உணர்வுகள் தெளிவாக சொல்லப்படுகின்றன….

ஏன்.. ஏன் … இப்படி நடந்தது…

ஏன், பரம பிதா… வானக இறைவன்.. இப்படி செய்தார்… ஏன் தன் மகனை வலியுடனும் வேதனையுடனும் மரிக்க சம்மதித்தார்… அவர் நினைத்திருந்தால்… தன் மகனின் துயரத்தை துடைத்து இருக்கலாமே…
ஏன் இறைவன் யேசுவை கை விட்டார்…

இக்கேள்வி என்னிலும் தோன்றியது… மிக ஆதாரமான ஒரு கேள்வியாகவும் பட்டது, விடை உடன் தெரியவில்லை.. சில நாட்கள் ஆனது… வாரங்கள் ஆனது…  நேற்று திடிரென ஒரு விடை வந்தது.. இது சரியா என தெரியாது… ஆனால், இருக்கலாம் என பட்டது… அதை இதோ ஒன்று இரண்டு என பட்டியலிடுகிறேன்.. இது ஒரு சிந்தனை தான்.. இதை விட தேர்ந்த பதில்கள் தங்களிடம் இருக்கலாம்… சொல்லுங்களேன்… இதை பகிர்வதன் நோக்கமே… 

தங்களின் கருத்துக்களை கேட்கவும், கற்றுக் கொள்ளவும் ஆவலாய் இருக்கிறேன்…


1.   படைப்பில் இருந்து துவங்குவோம்… இறைவன்.. வானத்தையும், பூமியையும், அதில் காண்பவை காணாதவை என அனைத்தையும் படைத்தார்.

2.   மனிதனையும் மனுஷியையும் படைத்தார். மனிதனை இறையின் இயல்பாக படைத்தார்.

3.   அந்தோ பரிதாவம்… மனிதன் தன் உயர் நிலையை உணரவில்லை… அவனது படைப்பின் நோக்கத்தை உணரவில்லை.. மாறாக… அவன் கீழான விலங்கின் பரிமாணத்திலேயே தன்னை அடையாளம் கண்டான். இறைவன் மனிதனை படைத்த நோக்கமே.. வேறு… அவன் விலங்கிலிருந்து மேம்பட்டு இருப்பான், இறைக்கும் மற்ற உயிரினத்துக்கும் பாலமாய் இருப்பான்… இருக்க வேண்டும் என விரும்பினார்… அதுவே அவர் படைப்பின் நோக்கம்… இறைவன் வேண்டாம் என விலக்கிய சில சிற்றின்பங்களை மனிதன் … பின் சென்றான்…. பணம் புகழ் வீடு இன்பம்.. பேரு எனும் சுழலில் சிக்கி கொள்வதையே விரும்பினான்…, அவரின் சொல் பேச்சு கேட்கவில்லை..

4.   மனிதன் தன்னை முன்னிலைப்படுத்தினான்… தன் இயல்பை மறந்தான், துறந்தான்… இறைவன் கவலைப்பட்டார்… எப்படியாவது அவனை திரும்பவும் படைப்பின் நோக்கத்திற்கு இட்டு செல்ல விரும்பினார்… இறைவன் அவனுக்கு தீர்க்க தரிசிகளின் வாயிலாக பேசினார்… எப்படி நடந்து கொள்ளலாம் என அறிவுரை தந்தார்…

5.   மனிதன் தான் எல்லாம் தெரிந்தவன் ஆயிற்றே.. அவன் சட்டை செய்யவில்லை..

6.   மனிதன் மீண்டும் மீண்டும் முரண்டு பிடித்தான்… அப்படி என்ன தகராறு… மனிதனுக்கும் கடவுளுக்கும்… இது போதும்… என்று மனிதன் நினைத்தான்… செய்தான்… உதாரணம்… பணம் வேண்டும்… என் பணம் மட்டும் போதாது.. அடுத்தவன் பணமும் வேண்டும்… என்று நினைத்தான்.. பணத்திற்க்காக களவாடினான்… பணத்திலா இன்பம் இருக்கிறது என்கிறார் ஆண்டவர்… இறைவன் சொல்வதையே கேட்காமல், மனிதன் வேறெங்கோ ஓடினான்… இறைவன் திரும்பி பார்த்தார்… அந்த பெண்ணின் வடிவில் இன்பம் இருக்கிறது என ஓடினான்… இறைவன் அதில் இல்லை.. அது தற்காலிகமான சுகம் என்றார்… மனிதனோ… இது போதும்… இது போதும் என்றான்… இறைவன் இது சிற்றின்பம்… உனக்கு வேண்டாம்… என்றார்… மனிதன் அங்கே காணவில்லை.. அவன் வேறு இடத்துக்கு.. வேறு ஆசையுடன் சென்று விட்டிருந்தான்… இறைவனே மலைத்து போனார்… ஒரு இடத்தில் நிற்காமல்.. ஏன் இப்படி இன்பம் இன்பம் என ஓடுகிறான் என புரியாமல் பார்த்தார்….

7.   ஏன் ஆரம்ப கட்ட சுகங்களில் … தன்னை ஈடுபடுத்தி.. அடுத்த அடுத்த என முயன்று கொள்கிறான் என யோசித்தார்…

8.   பின்… வேறு சில நன்மக்கள் மூலமாய்…. பேசினார்.. இப்போது… சற்று இறங்கி வந்தார்…. சரி, நல்லது செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை… படிப்படியாய் மேலே செல்லலாம்… கெட்டது செய்யாதே… சமூகத்தை வதைக்காதே… அட்லீஸ்ட்… இதையாவது செய்.. என சில ரூல்ஸ் அனுப்பினார்… பத்துக் கட்டளைகள்… கொலை செய்யாமலிரு, மோக பாவம் செய்யாமலிரு, களவு செய்யாமலிரு……… என ஒரு மீனிமம் ப்ரோகிராம் ஒன்றை அனுப்பினார்..

9.   மனிதன்.. அதை வாங்கி கொண்டான் சட்டை செய்யாமல்… காது கொடுத்து கேட்காமல், தான் நினைத்த மூப்பாய்… முயங்கி கொண்டிருக்கிறான்..

10. காசு.. பணம்… துட்டு.. மணி.. மணி… பெண்கள்… இன்பம்… இன்னும் இன்னும் இன்பம்… உறவு.. உறவு.. நட்பு எல்லாம் நட்பு… ரொம்ப முக்கியம்… எதுலயும் நான் தான் பெஸ்ட்.. மிச்சவனெல்லாம் எனக்கு அப்புறம் தான் நெக்ஸ்ட்.. நெக்ஸ்ட்டு… நாந்தான் பெரிசு பெரிசு… எனக்குத்தான் பெரிசு.. பெரிசு….. அவன அடி, இவன கொல்லு எதுவும் ஒக்கே தான்… எனக்கு … ஜமக்கு ஜமக்கு…

11. இறைவன்… எப்படி எப்படி இவனுக்கு உணர்த்துவது என யோசித்தார்…. சரி, ஒரு வழி இருக்கிறது என கண்டு, எல்லா விலங்கினங்ளிலும் ஒரு ஜோடி என தேர்ந்தெடுத்து……….. ஐஸ் ஏஜ் காலத்தில்…….. ஒரு பெரிய பிரளயம் உண்டாக்கி, அத்தனை மனிதர்களையும் அழித்தார்.. க்ளீன் சிலேட் போல…. ஒரு நோவாவின் சந்ததி செய்தார்… இனி வரும் சந்ததியாவது நேராக இருக்கும் என்றார்…


12. ம்.. ஹூம்.. பலனில்லை… அதிலும் ஒரு பெரிய மாற்றம் இல்லை.. நோவா… நோ……. வாகவே போனது… இறைவன் விடுகிற பாடாக இல்லை…

13. நன் மக்களாய் தேர்வு செய்து,  நாம் அறிவுருத்தினோம்… ம்.. ஹூகும்… மனிதனோ… அவர்கள் சொல்வதை கேட்பதில்லை.. எனவே.. என் மகனையே அனுப்புவோம்… என தீர்மானித்தார்…

14. சரி, என இன்றிலிருந்து….  ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்….. தன் ரெப்பரசெண்டேட்டிவ்வாக… இறை மகனை அனுப்பினார்… அவரும் இங்கு வந்து போதிக்க துவங்கினார்..

15. போதனைகளை சிலர் கேட்டார்கள்.. அங்கும் வந்து, போதனைகள் அப்புறம் பாக்கலாம்..முதல்ல எனக்கு இதை தாயேன்.. இதை கொடேன் என பிச்சை பிரார்த்தனைகளையே பெரிதும் முன் வைத்தார்கள்..

16. இறை மகன்.. தலைமைப் பண்பே சேவைதான், உங்களுக்கு தலைவன் ஆக வேண்டுமென்றால், உன் சீடனின் பாதத்தை கழுவு என்றார்…. ம்… ஒக்கே… சொல்றது சூப்பராயிருக்குது… செம மேட்டரு…….. என அவரை பாராட்டி விட்டு, கேட்காத காதை ஆட்டி விட்டு……  நான் தான் பாசு…….. மிச்சமெல்லாம் தூசு…… என்றோம்… மனதில் எளிமையாயிரு.. விண்ணரசு உன்னதே என்றால்………. ஆங்.. யெஸ்.. யெஸ்.. ஞாயித்துக்கிழமை பூசைக்கு வருவேன்… வந்துட்டு……….சீக்கிரம் போகோணும்……. ஆமா… நிறைய பணம் பண்ணனும்.. என்றான்… ‘…. கோடி கோடியா பணம் கொட்ட ஏற்பாடு பண்ணு ஆண்டவரே…. என்றோம்………. நான் கோவிலுக்கு வர்றேன்… ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பேன்… ஆனா……தண்ணீரை ரசமாக மாற்றித்தா என மனிதன் கேட்டான்… குடும்பம் செய்வேன்.. எனக்கு உறவு போதும்.. எனவே.. செத்தவனை உயிருடன் தா…… என கேட்டான்…

17. மனிதன்.. தன் இறை இயல்புகளை மறந்து விட்டு, பிச்சை பாத்திரமாக மாறி, விழும் ஒன்றிரண்டு சில்லறை காசுக்காகவும்.. புகழ், பணம், நறுவீசு, சமூகத்தில் பெரிய ஆள், ஈகோ எனும் அழுக்குத்துணியை கழையத்தயாராக இல்லை… இப்போது இன்னும் ஒரு அதிர்ச்சி.. இறை மகனை சிலுவையில் கொல்ல தயாரானோம்…

18. என் மகனையா நீ கொல்லப் போகிறாய்… என் மகனையா நீ துன்புறுத்தப் போகிறாய்… உன்னை பாதுகாக்கும் என்னையா நீ இப்படி இம்சிக்க போகிறாய் என இறைவன் அதிர்ந்தார்… என்றாலும்.. மனிதன் திருந்த இதில் வழி உண்டா என நினைத்தார்…


19. இறைவன் யோசித்தார்… இவனை அழித்தும் பார்த்தாகி விட்டது, அறிவுரை சொல்லியும் பார்த்தாகி விட்டது… இனி என்ன செய்ய………. என யோசித்து…….. ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார்………. அது அஹிம்சை.. ஆம், அடித்தால்… சகித்து கொள்ளும்… ஆயுதம்…

20. அதைத்தான் இறைவன் செய்தார்…. மனிதன் மேல் கொண்ட அன்பினால் அதை செய்தார்.  அடித்த கை ஓய்ந்து, தளர்ந்து நிற்கும் போது, எதிரில் .நிற்கும் அடித்தவனை பார்க்கும் கொடுமை…. மிக வலியானது… சே.. நானா இப்படி அடித்தேன்.. நானா இப்படி மிருகமானேன்… என நினைப்பது மிக கொடுமை.. அப்படியாவது மனிதன் மனிதம் பெறுவானா என நினைத்தார்.

21. தன் மகனை… பலி கொடுக்க தீர்மானித்தார்… ஒருவன் தன் மகனை அடிக்கும் போது, ரத்தம் வழியும் போது, தந்தையின் மன நிலை எப்படி இருக்கும் ………. என்பது ஒரு தகப்பனுக்கு புரியும்…….

22. தன் வேதனையை சகித்து கொள்ளும் எவரும் கூட, தன் மகனின் சிறு வேதனையை பொறுத்து கொள்ள மாட்டான்.

23. வானுலகில் இருந்து, தந்தை… கடினமாய்.. தன் காதுகளை திருப்பி கொண்டார்… தன் ஒரே மகனின்.. கூக்குரலை… செவி கொடுக்காது இருந்தார்… தம் மகனின் கூக்குரலை புறக்கணித்தார். சிலுவைச்சாவை… தன் மகனின் பாடுகளை அங்குலம் அங்குலமாக அதை விட மேலான விதத்தில் தாம் உணர்ந்தார்… பல மடங்கு மேலாய் துயரம் கொண்டார்…

24. சிலுவை மரணம் குறித்த… தன் மகனின்….  யேசுவின் கூக்குரலுக்கு செவி மடுக்காத இறைவன்… அவரைப் பிடிக்க வந்து… யேசுவின் சீடரால் வெட்டப்பட்ட… காதை ஓட்ட வைக்கும் அற்புதத்திற்கு செவிமடுத்தார்… அதை செய்து கொடுத்தார்…

25. மனிதன் இன்றாவது அதை உணர்வானா…இறைவன் எல்லையில்லா அன்புள்ளவன்… கருணையுள்ளவன்… தன் படைப்பு.. எத்தனை அகங்காரம் கொண்டாலும், தவறு செய்தாலும்.. இப்போது திருந்தி விடுவான், இப்போது சரியாவான் என காத்து கொண்டு இருக்கிறார்… அஹிம்சையை முயற்சி செய்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது… அடுத்த ஆயுதம் என்னவோ,….. 

1 கருத்து:

  1. What i am thinking is, Yesu did all the things for others. When a doctor operating others can not do operation on his son. Why? The fear. the fear took all the energy. This is what happened to jesus also. He feared about his death. So this was happened to him. If he did not think about death, he may escape from that. So, always think positive. never fell in to fear.

    பதிலளிநீக்கு