பக்கங்கள்

இனிப்பு கண்ணா இனிப்பு !!!


இட்லி வடை ; வலை உலகில் அபிமானமும் வாசகரின் அன்பும் பெற்று, அரசியல், சினிமா, இலக்கியம் என ரவுண்டு கட்டி அடிக்கும் கலகல பதிவு மனை. ஒரு செய்தியும் அதன் தொடர்புடைய சிந்தையும் நான் எழுதி தர பிரசுரித்து உள்ளார்கள். படித்து நல்ல சில பின்னூட்டங்களும் வந்துள்ளன. இட்லி வடைக்கும் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும் சமர்பித்து கொள்கிறேன்.

இதை சாதிக்க உதவிய நண்பர் கோபி அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே இனிமை ஜாஸ்தி உள்ளவர்கள் .... கேரளாதான் என சொல்கிறது அறிக்கை. இது ரொம்ப பழைய மேட்டராச்சே, நம்ம பாட்டுக்கு ஒரு தலைவன் பாரதி சொன்னதுதானே,சேர நாட்டிள‌ம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்பது தானே என நினைப்பவருக்கு, இல்லைங்க இது வேற‌ ரூட். மேட்டர் வேற.

இது புதுசு கண்ணா புதுசு.

நாடெங்கும் ஆய்வு செய்ததில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள‌ நோயாளிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களில் முதல் இடம்
கேரளாவுக்கு.

எனக்கு சுகர் இருக்குங்க, என பெருமையாய் போன தலைமுறையில் சொன்னது, அல்லது அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாய் பார்த்தது எல்லாம் பரணில் தேடி தூசி தட்டாமல் இன்றைக்கு பார்த்தால். அதெல்லாம் நாப்பது வயசுல சகஜமய்யா என பழகிக் கொண்டது இந்த தலைமுறை. (ஒரு விழா மேடையில் கவிஞர் வாலி அவர்கள் தலைமை ஏற்க வருகை தந்த கலைஞர் அவர்களை பார்த்து இப்படி சொன்னது நினைவுக்கு வருகிறது...தலைவா நீ பாப்புலர் ஃபிகர் உன்னை கண்டவுடன் ஏறுது என் ஷுகர்)

நீரழிவு எனும் சுத்த தமிழ் வார்த்தை கேட்டவுடன் பக் என பயமாய் இருக்கிறது. ஏதோ ஒரு பேரழிவு போல பூச்சாண்டி காட்டுகிறது. அதையே ஆங்கில மொழி மாற்றம் சாதாரணமாக்கி விடுகிறது. சக்கரை நோய், ஹும்... ரத்தத்திலா, யூரினிலா என சகஜமாக்கி விடும். கிராமத்தில் இப்படி சொல்வதை வெறுமே ஆங்கிலத்தில் சுகர்ங்க என ஸ்டைலாய் ஸ்வீட்டாய் சொல்லும் போது இன்னும் சூப்பர்.

அவருக்கு கன்னாபின்னான்னு சுகர். அசந்து படுத்தார்னா எறும்பு வந்து மொய்க்குது’ இனிப்பை கண்ணால கூட பாக்கக்கூடாது. என கண்டிப்புடன் கண்ணாடி தூக்கி விட்டு மாமி சொல்லி விட்டு நகர. சுகர் தான்... ஆனா கண்ட்ரோல்ல இருக்கு. அடிக்கடி சாப்பிடக் கூடாது, அப்பப்ப சாப்பிடலாம் தப்பில்ல என அசடு வழிந்து பச்சப் பிள்ள மாதிரி கேக்கிறார் நம்ம அப்புராணி மாமா, ஒரே ஒரு ஜாங்கிரியை... இந்த புரட்டு புரட்டுதே இது என்ன வியாதி.

வியாதி இல்ல. ஒரு சின்ன குறைபாடு. இன்சுலீன் எனும் த‌க்கூனுண்டு சமாச்சாரம் ரத்தத்தில குளுக்கோஸ் அளவை சமமாக்கி, தேவையானதை எடுத்துக்கிட்டு, போலாம் ரைட் என கழிவுக்கு அனுப்பி விட்டுவிட்டு, உடம்புக்கு வைச்சுக்கோ நீ என கொடுப்பது. சில சமயங்களில் கோவிச்சுக்குட்டு, மாட்டேன் போ தரமாட்டேன்னு தகராறு பண்ணுறதால உடம்புலயே இருக்க வேண்டிய ஸ்வீட் மெலடிஸ் கழிவாய் போறது தான் பிரச்சனை. இது அன்றி, சர்க்கரையை ரத்தத்திலேயே வைத்து கொள்வது (உடன்பிறப்புகளை இதய‌த்துல மட்டும் இடம் கொடுத்து), ப்ளட் ஷுகர்...

உணவு பழக்கம் முக்கிய வில்லன்னாலும், வேலை பளு, ஸ்ட்ரெஸ், போதிய ஓய்வின்மை இதெல்லாம் சைடு வில்லன். சில சமயம், இந்த சைட் வில்லன் பண்ற சேட்டை, மெயின் வில்லனின் சேட்டையை விட ஜாஸ்தினு நாம ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சுட்டோம்.

நிற்க.... தொடங்கின மேட்டர் கேரளாவுக்கு வந்தால். ஏன் கேரளாவில ஷூகர் கம்ப்ளைண்ட் ஜாஸ்தியாச்சுன்னு கேட்டா, அளவுக்கதிகமான தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகம் என காரணம் காட்டுகிறது ரிப்போர்ட். இதப் பத்தி நம்ம "பாலக்காட்டு சேட்டன் திரு மாரார்" கிட்ட கேட்டதுக்கு அவர் பரைஞ்சது என்னன்னா ‘தானா வளர்ர தென்னைமெரம். அதுல புடுங்கி எண்ண எடுத்தா என்ன ஏன் புடுங்கிங்கீறீங்கங்கறார்.

அங்கன பரைஞ்சாலே இந்தியாவிலே 95 சதவிகிதத்துக்கு மேலா எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளது கேரளாவில தான். தினசரி நியூஸ் பேப்பர் படிச்சுட்டே P.hd வாங்குற அளவுக்கு அறிவு ரோடெல்லாம் கொட்டிக் கிடக்குது. அந்த கேந்தியில லேசா தல சுத்துன உடன, ஒண்ணுக்கு மேலா ஒண்ணுக்கு போனவுடன ஓடிப் போய் டாக்டர பாக்கிற வினை எல்லாம் தான், இது மாதிரி பர்ஸ்டா வருது.

கலகலப்பா ஒரு பதிவு இருக்கும்யா, பாடிகார்டு முனிக்கு ஒரு கடிதம் இருக்கும்யா, என நகைச்சுவை தேடி வரும் இட்லி வடை வாசகர்களுக்கு வாங்கய்யா, உடம்ப நல்லா பாத்துக்கோங்க, நல்லவங்க கெடச்சா வந்து பழகுங்கய்யா...முடிஞ்சா சீனிய குறைங்க, டென்ஷன குறைங்க, உடற்பயிற்சி செஞ்சு, நல்லா கெதியா இருங்க என சொல்ல ஆசையும் அக்கரையும் உண்டுங்கோ.......ஷூகர்னு கேட்டாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது இல்ல..

(லாரன்ஸ் / படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்) + அனுப்பிய நண்பர் R.Gopiக்கு நன்றி

http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_5056.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக