பக்கங்கள்

காதல்

காதல் மனிதனுக்கு அவசியமா?

இல்லையா பின்ன, அப்புறம் நான் எப்படி குப்புற படுத்து கவிதை எழுதுவது. விட்டத்த பார்த்து கனா காண்பது,லவுசு மூடுல உலகத்தயே மறந்து அலைந்து திரிவது.

ஒன் மினிட், கேள்விய சரியா வாசிக்கட்டும்.

ம்.... காதல் !!!! ????

காதல் பற்றிய விளக்கம் தான் எனை குழப்புகிறது. அதீதமான பிரியம் காதல் எனலாமா.

கல்மிஷம் இல்லாமல் யாருக்கு விட்டுக் கொடுக்க முடியுதோ அங்கு காதல் இருக்கிறது என்று எழுத்துச் சித்தர் பாலா சொல்லுவார். ரசாயண சேட்டை, எக்ஸ்ட்ரோஜன்களின் எழுச்சி என்பார் சுஜாதா.

காதல் மனிதருக்கு இடையில் உறவாடலில் உள்ளதா, அன்றின் மனித மனதில் உள்ளதா.

காதல் என்பது பெரும்பாலாக நம் வாழ்க்கை வழக்கில்/ விளக்கத்தில் திருமணத்துக்கு முன் ஆண் பெண்ணுக்கும் இடையில் பூப்பதையே குறிப்பிடுகிறோம்.

இல்லாமல் கல்யாணத்துக்கு பின் மனைவியோடு காதல், தொழில் காதல், இலக்கு/ இலட்சிய காதல் என சேர்த்துக் கொண்டால். அப்பு அது தப்பு என்றோ ஆஹா அது உப்பு அதை சப்பு என்றெல்லாம் எழுதி விடலாம்.

எக்கச்சக்க காதல் இருப்பதாலும், காதல் அவசியமா என்ற கேள்வியிலே, பதில்கள் இரண்டு சாய்ஸாய் இருப்பது தான் குழப்பத்தின் காரணகர்த்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக