பக்கங்கள்

தாத்தாவ மறந்திட்டியே கண்ணு....

1
கும்மிருட்டு. குடிகார குடிமகன்கள் கூடி கும்மியடிக்கும் குஜாலான பார். கூட்டம் அள்ளுது. அதோ அந்த டேபிள்ல, அதேதான் லாஸ்ட்ல இருந்து இரண்டாவது. அங்கதான் போதையில் தாறுமாறாய் நம் செல்லத்தம்பி.
சரி போதும். நிறுத்திர வேண்டியது தான் இதே லெவல்ல கிளம்பினாத்தான் வீடு சேர முடியும் இல்லை, பாதி வழியில எங்காவது ரோட்டில தான் படுக்க வேண்டி இருக்கும் என தோணியதால் இடுப்பு பேண்ட் இழுத்து விட்டு கிளப்பத் தயாரான போது, அடுத்த டேபிள் ஆளு, சொன்னதால் அவசர அவசரமாய் போய் அடுத்து ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டார்.
ஏன்.....

2
எவ்வளவு தரம் கழுவினாலும் இந்த சிங்க்ல போடுற பாத்திரம் ஒழியுரதில்ல. நைட்டுல வேலையெல்லாம் முடிஞ்சு அக்கடான்னு படுக்கலாம் என்கிற போது தான் ஒரு வண்டி பாத்திரம் இருப்பது தெரிகிறது. இப்பவாவது பரவாயில்ல காலையில பாத்துக்கலாம்னு விட்டா அவ்வளவுதான் காலை பரபரப்பில் இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

கை என்னவோ எச்சில் பாத்திரத்தோடுதான் என்றாலும் எண்ணம் மட்டும் நாளை திட்டமிடலில். (உபயம்: வைரமுத்துவின் வீரிய வைர கவிதைகள்) பிள்ளைகளுக்கும் அவருக்கும் லீவு, மட்டன் எடுத்து லீவர் பிரை பண்ணிர வேண்டியது தான். நினைத்த்தை சொல்ல்லாம் என உரக்க கணவனை அழைத்து விட்டு சட்டென உரைக்க நாக்கு கடித்துக் கொண்டு, தலை ஆட்டி சிரித்தாள்.

ஏன்.....

இன்று காந்தி ஜெயந்தி

அவரோடு வாழ்ந்த காலத்தில் இறு வேறு ஆட்கள்.
புத்தன் யேசு காந்தி என நம் மூத்தவர் சிலர் சிலாகித்து சொன்னார்கள். லிஸ்டில் இருந்து காந்திய எடு! அவர் என்ன தேவ குமாரனா என்றும் இரு வேறு கூறுகளாய் தர்க்கம் செய்தனர். அது அன்று.

இன்று,
அடைத்த கடைகளில் மாத்திரம்!!!
அன்றைக்கு மட்டும் திருட்டுத்தனமாய் நாம் செய்யும் சேட்டையிலுமே!!!
அஹிம்சை பல் இளிக்கிறது. திவிரவாதம் திமிறிக்கொண்டி இருக்கும் இந்த வேளையில் காந்தி இருந்தால் என்ன செய்வார் என்று திரைப்படம் எடுத்து நம் கல்லாவை நிரப்பிக் கொள்கிறோம். அம்புட்டுதேன்.

மறக்காமல் இன்றும் அரசு அலுவலகங்களில், அவர் போட்டாவாய் தொங்குகிறார். காந்திய பாரு, அவர் சொன்னத கேளுன்னு பதிவர் நாமெல்லாம் கூட சொல்வதே அன்றி செயல் படுத்தினோமா எனும் கேள்வி மண்டய பிராண்டுது.

அவரது அரசியல் அல்லது சுதந்திர போராட்டம் அன்றைய காலக் கட்டாயம். அதை உங்கள் அனுமதியோடு தள்ளி வைப்போம். கதராடை, அஹிம்சை, ஒத்துழையாமை இதெல்லாம் அது கூடவே சென்று விடும்.
மிஞ்சி நிற்பது அடிப்படை காந்தீயம்.
அச்சம் இன்மை,
அடி வாங்கும் வலு இருந்தால் திருப்பி தாக்கும் திறன் தேவை இல்லை
ஒளிவு மறைவின்றி உள்ளத சொல்லு
உனக்கு சரி யெனப் பட்டால், சட்டய தூக்கி வீசு, அடுத்தவனுக்காக பீட்டர் இங்கிலாண்டு போடாத
கடல தூண்ணு, ஆட்டுப் பால் குடி, உடம்ப உரமாக்கு
மனிசனுக்குள்ள ஏற்ற தாழ்வு இல்ல,
கடவுள் கால புடி, கட்டிக்கா புடி, விட்டுரவே விட்டுராத
நல்லா படி, அறிவுதான் மெயின் மற்றதெல்லாம் கொய்ங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக