பக்கங்கள்

உடையத உட்டுட்டு உருளுரத பிடிச்சிபுட்டோம்

சாப்டுறது எதுக்கு ????
மக்கா!!! சத்தா இருக்கதுக்கு.......
நம் அத்தனை பேரின் வயிற்றில் , உண்ணும் உணவை செறிக்க வைக்க ஒரு ரசாயன தொழிற் சாலை.

ஒரு மாமிசத்தை தகிக்கும் ரசாயணம் கீரைக்கு அவசியம் இல்லை.
கீரையை தகிக்கும் ரசாயணம் மாமிசத்திடம் தோற்று விடும்.

உண்ணும் உணவின் தன்மையை அனுசரித்து ஏற்ற இறங்கங்கள் அவசியம்.

சரி இதை அறிந்து கொள்வது எப்படி.

கண்கள் வழி சில தகவல்கள், மூக்கின் வழி மணமாய் சில தகவல்கள். இவற்றை ஆலோசித்து உடனடியாய் தடாலடியாய் ஒரு கலவை உண்டு செய்து எச்சில் வழி அனுப்பும் விந்தை.

அகஸ்மாத்தாக சுவையான மணம் அடித்தாலோ அல்லது உணவை பார்த்தாலோ நம்மை அறியாமல் வாயில் எச்சில் ஊறி பாவம் போலே சில நேரம் நிற்கும் கதை வேறு உண்டு.

ஒரு கேள்வி ?????

எத்தனை தரம் நம் உடல் தேவை அறிந்து அதற்காக மட்டும் நாம் உணவு உண்டு இருக்கிறோம். காய்ச்சல், வாய்வு புடிப்பு போன்ற தருணங்களை தவிர்த்து விட்டால்.

சுவை என்னும் சுகம், வயிறு நிரம்பிய உடன் கிடைக்கும் நிறைவு என்னும் பக்க விளைவுகளை மட்டுமே பக்கவாக எதிர் பார்த்து இருக்கிறோம்.

உண்பதில் மாத்திரமா ??

இன்னும் எத்தனை விடயங்களில்

உடுத்துவதில் ..............
உழைப்பதில் ..............
உடலுறவில் ..............
உறவாடுவதில் ..................
உரையாடுவதில் .................
இதை தான் படைத்தவன் படைத்தான் உலகுக்காக
மனிதன் பிரித்தான் அவனுக்காக

என்பதோ.

இது தான் நடு மரணத்தின் கனியோ.... , கீழ்படியாமையின் செயலோ.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக