பக்கங்கள்

பெண்ணின் இதம் ஒரு தனி விதம்.


என்னை பாதித்த மகளிர் என்று மகளிர் தின நினைவுகள்.

தாய், ஆச்சி, மனைவி, உறவினர், தோழமை, மகள் என்று பல வழிகளில் என்னை உருவாக்கி உரமாக்கி உள்ளனர்.

பெண்ணின் இதம் ஒரு தனி விதம். சோர்ந்து போன போது- மடியில் படுத்து கதறி அழுதபோது - தலை தடவி தாய் தந்த நம்பிக்கை அலாதி ஆனது. இன்னும் இன்னும் என்று ஏங்குவது. உலகத்தின் நம்பிக்கையை அந்த ஒரு தடவல் - மெய் தீண்டல் உணர்த்தும். பாதுகாப்பாய் இருந்த கருப்பை காலங்கள் அல்லது கர்பப்பை காலங்கள் எந்த மனித உயிரும் ஏங்கும். புத்தியை விலக்கி வைத்து விட்டு ஆன்மா தேடும்.


காதலில் திளைத்து கண்களை மூடி கண்ணுக்கு தெரியாத வான் வெளியை பார்க்கும் போது இனிமையின் உச்சம், தன்னம்பிகை தரும். இலக்கியம் பொங்கி பரிமளிக்கும். இறை உணர்தலே நிகழும் உன்னத உணர்ச்சி.

பெண் நட்பு தரும் நம்பிக்கை ஒரு தனி விதம். கர்வம் இல்லாத நிலை. நம் தலை கனம் நம்மை விட்டு விலகும்.

எழுத்து சித்தர் பாலா பெண்ணை விளக்கிட சிங்கத்தை துணைக்கு அழைப்பார். ஆண் சிங்கம் அழகானது. பிடரி உள்ளது. உறுமும் பயம் காட்டும் ஆனால் சோம்பேரி, கொல்லத் தெரியாது

வீரியம் ஆனதும் சுறுசுருப்பானதும் பெண் சிங்கம். குடும்ப அமைப்பு, இரை தேடுவது இதை எல்லாம் பார்த்து கொள்வது பெண் சிங்கம். சண்டைக்கு சென்றால் கொன்று விட்டு தான் மறு வேலை. இந்த பம்மாத்து உதார் விடுவது எல்லாம் தெரியாது. கிடையாது.

இதை உற்று நோக்கிய நம் முன்னோர்கள் தான் , கலாச்சாரத்தின் பெயரால் அவளை வீட்டுக்குள் வைத்து விட்டு ஆண்களை முன்னிலை படுத்தி கோட்பாடுகள் அமைத்தார்கள் என்பார். (பின்னே பேசி சமாளிக்க வேண்டிய பஞ்சாயத்தை கொலை கேஸ் ஆக்கினா)


சரி ஒரு கேள்வி.

இருபாலருக்கும் பொதுவான ஒரு கேள்வி. மேலே சொன்ன விடயங்களை ஒரு பெண்ணால் மட்டும் செய்யா முடியுமா இல்லை ஒரு ஆண் செய்ய முடியுமா. (சிண்டு முடியும் வேல எல்லாம் இல்லை)

இயல்பிலே சற்று வித்தியாசம் ஆனவள் பெண். அவள் தேவைகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் பங்களிப்பு எல்லாம் ஆணின் கோட்பாடுகளில் புரிந்து கொள்வது சற்று சிரமம்.

இந்த வித்தியாசமும் போராட்டமும் தான் மனித வாழ்வாய் விஸ்வரூபம் எடுக்கிறது.

இதெல்லாம் சரி காளையர் தினம் எப்போ கொண்டாட போறிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக