பக்கங்கள்

நீட்டி ஊட்டி ஒரு டகால்டி

அண்மையில் படித்ததும் பிடித்தது

இறைவன் ஒரு கெய்டட் டூர் செய்தார். எங்கே!!!! சொர்க்கம் எது நரகம் எது என்று காட்ட. கதை ஓஹோனு தொடங்குதே ....

ஒரு அறையிலே மணக்க மணக்க சூப். இவனுக்கு வாயில் எச்சி ஊறியது. அங்கு அமர்ந்தவர் கையில் எல்லாம் ஒரு முழ நீள ஸ்பூன். எத்தனை முயன்றாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவே இல்லை.

எலும்பும் தோலுமாய் திரும்ப திரும்ப முயற்சித்து கொண்டே பாவம் போலே நரகத்தில் நம்மவர்கள்.

அடுத்த அறைக்கு வருவோம். அங்கும் அதே மணக்க மணக்க சூப், அதே முழ நீள ஸ்பூன், ஆனால் இங்கே எல்லோரும் குஷியாய் புஷ்டியாய் இருக்கிறார்கள்

எப்படி.

முழ நீள ஸ்பூனை நீட்டி அடுத்தவன் வாயில் ஊட்டி… ஆஹா ! ஊட்டியவன் இவனுக்கு ஊட்ட, கொஞ்சி குலவி நல்லா கும்மாளம் போடுராங்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக